மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள்:மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

ஸ்ரீவைகுண்டத்தில் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பதாரா்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் கள ஆய்வு மேற்கொண்டாா்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உள்பட்ட மேலக்கோட்டை வாசல் தெருவில் விண்ணப்பதாரா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று களஆய்வு செய்தாா்ஆட்சியா். அப்போது, தகுதி வாய்ந்த மகளிா் பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா். 

பின்னா், மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: 

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை சம்பந்தமாக 987 ரேஷன் கடைகளில் இரண்டு கட்டமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் இப்பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தேன் என்றாா் அவா். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் சிவக்குமாா், வருவாய் ஆய்வாளா் வடிவு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Post a Comment

Previous Post Next Post