ஆஸ்துமாவை எதிர்க்கும் அற்புத மருந்து! (சீத்தாப்பழத்தின் நன்மைகள்)


விரைவில் மழைக்காலம் வரப்போகும் நிலையில் நம் உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்வது மிக முக்கியம். ஏனெனில் மழைக்காலத்தில் பல்வேறு வைரஸ்கள் நம்மை நோய்வாய்ப்பட செய்யும்.

அந்த வகையில் காலத்திற்கு ஏற்ப வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைச் செய்வது அவசியம். ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தினமும் பழங்களை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இவை பல்வேறு நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இந்த மழைக்காலத்தில் கிடைக்கக்கூடிய அற்புதமான பழங்களில் ஒன்று சீத்தாப்பழம். இது நாவிற்கு அற்புதமான சுவையை மட்டும் தராமல், உடலிற்கு ஆரோக்கியத்தையும் வாரி வழங்குகிறது. இதில் உள்ள இனிப்பு மற்ற பழங்களை விட அதிகம். இதன் காரணமாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி ஆஸ்துமா பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் தருகிறது. அந்த வகையில் இன்று சீத்தாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

சீத்தாப்பழத்தின் நன்மைகள்:

உடல் எடையை அதிகரிக்க உதவும்:

நீங்கள் குறைந்த எடை காரணமாக அவதிப்படுகிறீர்கள் என்றால், சீத்தாப்பழம் உங்களுக்கு உடல் எடையை அதிகரிக்க உதவி செய்யும். சீத்தாப்பழத்தில் உள்ள இனிப்பு சுவை மற்றும் சிறந்த ஆற்றல் மூலம் நம் உடல் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்பிற்கு உதவி செய்கிறது.

ஆஸ்துமா:

நுரையீரல் வீக்கம் காரணமாக ஆஸ்துமா பிரச்சனை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சீத்தாப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பெரிய அளவில் நிவாரணம் அளிக்கும். ஒரு அறிவியல் ஆராய்ச்சியின் படி, சீத்தாப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆஸ்துமா அபாயத்தை குறைக்க உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை மேம்பாடு:

வைட்டமின் சி மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை ஆரோக்கியமான கண்களுக்கு இரண்டு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள். சீத்தாப்பழத்தில் உள்ள இந்த ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் திறனைக் கொண்டுள்ளன, இதனால் செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. மேலும் சீத்தாப்பழம் கரோட்டினாய்டு ஆக்ஸிஜனேற்றம், லுடீன், ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாப்பதற்கும் பங்களிக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து மாகுலர் டிஜெனரேஷன் மற்றும் கண்புரை போன்ற வயது தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

சரும பாதுகாப்பு:

சீத்தாப்பழத்தில் அதிகளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் வயதானது போல் ஏற்படும் தோற்றம், முக சுருக்கம் போன்ற பல தோல் தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கிறது. தொடர்ந்து, சீத்தாப்பழம் எடுத்துகொண்டால் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

மன சோர்வை குறைக்கும்:

சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் B6 நிறைந்துள்ளது. இது மனநிலையை சீராக வைத்திருக்க பெரிதும் உதவி செய்யும். இரத்தத்தில் வைட்டமின் பி6 இன் போதிய அளவு இல்லாமை, மனச்சோர்வை தரும். எனவே, சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6, மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைத்து புத்துணர்ச்சி தரும்.

செரிமானம்:

ஜீரண செயல்முறையை மேம்படுத்த சீத்தாப்பழம் பயனுள்ளதாக இருக்கும். ஒரு உடலில் ஆரோக்கியமான செரிமானத்திற்கு நார்ச்சத்து அவசியம். சீத்தாப்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்:

சீத்தாப்பழம் இரத்த அழுத்தத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சீத்தாப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

கர்ப்பம்:

கர்ப்ப காலத்தில் தினமும் சீத்தாப்பழத்தை உட்கொள்வது கருச்சிதைவு அபாயத்தை குறைக்கும்.வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு சீதாப்பழம் நல்லது என்றும், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

சீத்தாப்பழத்தால் ஏற்படும் தீமைகள்:சீத்தாப்பழத்தில் அனோனாசின் என்ற சிறிய அளவில் நச்சு கலவைகள் உள்ளன. இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

சீத்தாப்பழம் உட்கொள்வது சிலருக்கு ஒவ்வாமை, அரிப்பு மற்றும் சொறி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

சீத்தாப்பழத்தில் சிட்ஃபால் எனப்படும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதன் காரணமாக, இப்பழத்தை அதிகம் சாப்பிடும்போது வயிறு வீங்குவது போன்ற உணர்வு ஏற்படும். வயிற்று வலி ஏற்படலாம்.
Previous Post Next Post